பயிர் பாதுகாப்பு :: அன்னாசி பயிரைத் தாக்கும் பூச்சிகள்

ரைனோசெரஸ்வண்டு: ஒரைடக்ஸ் ரைனோசெரஸ்

அறிகுறிகள்:

  • அடித்தண்டில் வண்டு குடைவதால் செடி வாடும்.

பூச்சியின் விபரம்:

  • புழு – நத்தை புழு போன்று ‘L’ வடிவத்தில், வெள்ளை நிறத்தில் காணப்படும்.
  • பூச்சி – தடித்து, பழுப்பு கலந்த கருப்பு நிறத் தலையுடன், தலையிலிருந்து கொம்பு நீட்டிக் கொண்டிருக்கும்.

கட்டுப்பாடு:

  • இறந்த பைனாபிள் மரங்களை அகற்றி, எரித்தல்
  • சேதமடைந்த அல்லது பூச்சியின் பல நிலைகளையும் சேகரித்து, உரக்குழியில் இட்டு அழித்தல்.
  • மரத்தின் அடிப்புறத்திலிருன்து புழுக்களை இரும்பு கம்பி கொண்டு குடைந்து வெளியே எடுத்தல்.
  • விளக்குப் பொறி 1/ஹெக்டர் என்ற அளவில் அமைத்தல்.
  • ஆமணக்கு கட்டி 1 கிலோவை 5 லிட்டர் தண்ணீரில் கரைத்து, சிறிய மண் பானைகளில் தோட்டத்தில் வைத்தல்.
  • மெட்டார்சியம் அனிசோபில்லே, மேக்குலோவைரஸ்ஸை வெளிவிடுதல்.
  • ரைனோலுயூர் கொடி பொறியை பயன்படுத்துதல்.
  • இரை விழுங்கிகளான ப்ளேட்டிமெரிஸ் லேவிக்கொலிஸ் தோட்டத்தில் விடுதல்
  • கார்பைரில் 0.1% மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தெளித்தல்
  • மாலத்தியான் 5% தெளித்தல்.


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015